மிலான்: சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை ஸ்பெயினின் ரியால் மட்ரிட் வென்றுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சக நாட்டைச் சேர்ந்த அட்லெட்டிகோ மட்ரிட்டை எதிர்கொண்ட ரியால், பெனால் டிகள் வாயிலாக 5-3 எனும் கோல் கணக்கில் வென்று கிண்ணத்தை ஏந்தியது.
ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் முடிந்ததால் முடிவை நிர்ணயிக்க கூடுதல் நேரம் தேவைப்பட்டது. கூடுதல் நேரத்திலும் வெற்றி கோல் போடப்படாத நிலையில் 'பெனால்டி ஷுட்அவுட்' நடத்தப் பட்டது. இதில் ரியாலின் கையோங் கியது. இறுதி வரை போராடிய அட்லெட்டிகோவுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஆட்டத்தின் 15வது நிமிடத் திலேயே ரியாலின் செர்ஜியோ ராமோஸ் தமது அணியின் முதல் கோலைப் போட்டார். இதனைத் தொடர்ந்து ஆட்டத் தைச் சமன் செய்ய அட்லெட்டிகோ தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், கோல் போடுவதற்கான பொன்னான வாய்ப்பு வலம் வந்தது.
கடும் போராட்டத்திற்குப் பிறகு வெற்றி பெற்ற கிண்ணத்துடன் கொண்டாட்ட மழையில் நனையும் ரியால் ஆட்டக்காரர்கள். படங்கள்: ராய்ட்டர்ஸ்