மும்பை: பயிற்சியாளருக்கு இந்தி தெரிந்திருத்தல் விரும்பத்தக்கது என்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விளம்பரத்திற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. இது குறித்து விளக்கம் அளித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். இந்திய அணிக்குத் தலைமைப் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்கும் கிரிக்கெட் வாரியம் அதற்கான விளம்பரத்தையும் இரு தினங்களுக்கு முன் வெளியிட்டது. அதில் இந்தி, இதர இந்திய மொழிகள் தெரிந்திருப்பது விரும் பத்தக்கது என கூறப்பட்டிருந் தது.
இந்திய மொழிகள் என்று பொதுவாகப் போடாமல் அது என்ன இந்தி எனக் குறிப்பாக போடுவது என்று சமூக வலைத ளங்களில் பிசிசிஐ குறித்து விமர்சனங்கள் எழத் தொடங்கின. இதையடுத்துப் வாரியம் அளித்துள்ள விளக்கத்தில், "வீரர்களிடம் தனது கருத்தை சரியான முறையில் கொண்டு செல்லக்கூடிய திறமையுடன் கூடிய தலைமைப் பயிற்சியாளரைத் தேடி வருகிறோம். "இந்திய மொழி ஒன்றைத் தெரிந்திருந்தால் அது பயன் அளிக்கக்கூடியது என்றுதான் சொல்லியுள்ளோம். ஆனால், இந்திய மொழி ஒன்று கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை," என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் அது புதிதாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தி என்ற வார்த்தையையும் நீக்கி யுள்ளது.