ஹராரே: ஸிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கைப்பற்றியது இந்தியா. இதனால், 2014ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றிய பிறகு டோனி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் போட்டித் தொடரை வென்றதில்லை என்ற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பூவா தலையா வென்ற இந்தியா முதலில் பந்து வீசியது. முதல் 10 ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை பறிகொடுத்த ஸிம்பாப்வே, 23.2 ஓவரில்தான் 100 ஓட்டங்களை எட்டியது.
34.3 ஓவருக்கு 126 ஓட்டங்கள் மட்-டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஸிம்பாப்வே. சாகல் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் விளையாடிய இந்திய அணி 26.5 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அறிமுக ஆட்டத்தில் சதமடித்த ராகுல், நேற்றைய ஆட்டத்தில் 33 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.