ரஷ்யா எச்சரிக்கை பாரிஸ்: யூரோ காற்பந்து தொடரின்போது கலகத்தில் ஈடுபட்டதாக ரஷ்ய காற்பந்து ரசிகர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக பிரான்ஸ் தூதருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது ரஷ்யா. நேற்று முன்தினம் ரஷ்யா, ஸ்லோவாகியா அணிகள் விளையாடியபோது மீண்டும் ரகளையில் ஈடுபட்டதால் மேலும் ஆறு ரஷ்ய ரசிகர்கள் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். அதேசமயம் 3 ரஷ்யர்கள் அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ரஷ்யர்களுக்கு எதிரான நடவடிக்கை தொடர்ந்தால், அது ரஷ்ய= பிரெஞ்சு உறவை மோசமாக்கும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
சாலை வழிகாட்டி பலகைகள் மீது ஏறி ரகளை செய்த ரசிகர்கள். படம்: ஏஎஃப்பி