லியோன்: உலகின் தலைசிறந்த காற்பந்து ஆட்டக்காரர் விருதை மூன்று முறை வென்றுள்ளபோதும் நடப்பு யூரோ தொடரின் காலிறுதிச் சுற்று வரை போர்ச்சுகல் அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. அந்த ஏமாற்றங்களை எல்லாம் துடைத்தெறியும்விதமாக அமைந் தது அரையிறுதியில் ரொனால்டோ வெளிப்படுத்திய ஆட்டம். வேல்ஸ் அணிக்கெதிராக நேற்று அதிகாலை நடந்த அரை இறுதிப் போட்டியின் முதல் பாதி யில் இரு அணிகளின் கோல் முயற்சிகளும் பலிக்கவில்லை.
ஆயினும், பிற்பாதி ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் பந்தைத் தலையால் முட்டி அற்புத மான கோலை அடித்து தமது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார் ரொனால்டோ. இந்த அதிர்ச்சியில் இருந்து வேல்ஸ் வீரர்கள் மீள்வதற்குள் போர்ச்சுகல் இன்னொரு கோலை யும் புகுத்தியது. இம்முறையும் அதற்கு அச்சாரம் போட்டது ரொனால்டோதான். அவர் உதைத்த பந்தை சற்று திசைதிருப்பி வலைக்குள் தள்ளி விட்டார் முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் ஆட்டக்காரர் நானி. பதில் கோல்கள் அடிக்க வேல்ஸ் ஆட்டக்காரர்கள் பெரு முயற்சி மேற்கொண்டபோதும் அது ஈடேறாமல் பார்த்துக்கொண் டது போர்ச்சுகலின் தற்காப்பு வரிசை. வேல்ஸ் குழுவின் நட்சத் திர வீரரான கேரத் பேல் ஒரு சில முறை பந்தை எதிரணி வலையை நோக்கி உதைத்தபோதும் பந்து நேராக கோல்காப்பாளர் கைகளை நோக்கியே சென்றது.
ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் போர்ச்சுகலின் முதல் கோலை முட்டிய ரொனால்டோ. ஏஎஃப்பி