ஷாங்ஹாய்: கால் எலும்பு முறிவு தம்மை காற்பந்து ஆட்டங்களிலிருந்து ஓய்வு பெறச் செய்யாது என்று முன்னாள் நியூகாசல், செல்சி வீரர் டெம்பா பா தெரிவித்துள்ளார். சீன சூப்பர் லீக்கில் ஷாங்ஹாய் ஷென்ஹுவா குழுவுக்காக விளையாடி வந்த பா, ஆட்டத்தின்போது படுகாயம் அடைந்தார். கால் எலும்பு முறிவு ஏற்பட்டு அவர் வலியால் கதறி அழுத காட்சி பார்ப்பவரைப் பதறவைத்தது. பாவுக்கு ஏற்பட்ட இந்த மிக மோசமான எலும்பு முறிவு அவரது காற்பந்து வாழ்க்கையை ஒரு முடிவுக்குக் கொண்டு வரக்கூடும் என்று ஷாங்ஹாய் ஷென்ஹுவா குழுவின் பயிற்றுவிப்பாளர் கிரேகோரியோ மன்சானோ அச்சம் தெரிவித்தார்.
ஆனால் படுகாயம் அடைந்துள்ளபோதிலும் மனந்தளராமல் இருக்கிறார் செனகல் நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரரான 31 வயது பா. "எனக்கு மிக மோசமான காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் நான் இதிலிருந்து மீண்டு வருவேன். காற்பந்திலிருந்து ஓய்வு பெறமாட்டேன்," என்று அவர் கூறினார்.