சென்னை: முதல்முறையாக நடத் தப்பட்ட இந்திய பிரிமியர் ஃபுட்சால் போட்டியை மான்செஸ்டர் யுனை டெட்டின் முன்னாள் நட்சத்திரம் ரயன் கிக்ஸ் தலைமையிலான மும்பை அணி கைப்பற்றியுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மும்பை அணியும் கொச்சி அணியும் மோதின. ஆட்டத்தின் எட்டாவது நிமிடத்தில் கொச்சி கோல் போட்டு முன்னிலை வகித்தது. 40 நிமிடங் களுக்கு நடத்தப்பட்ட ஆட்டம் முடிவதற்குள் எப்படியாவது கோல் போட்டு சமன் செய்யவேண்டும் என மும்பை போராடியது.
அதன் பல கோல் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. மும்பை யின் தாக்குதல்களை கொச்சியின் கோல்காப்பாளர் கஸ்சலோன் முறி யடித்தார். தோல்வியின் விளிம்பில் இருந்த மும்பை, ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கோல் போட்டு சமன் செய்தது. கொலம்பியாவைச் சேர்ந்த எஞ்சலோட் மும்பை அணிக்காகப் கோல் போட்டார்.
தாக்குதலில் ஈடுபடும் மும்பையின் ரயன் கிக்ஸ் (இடது). படம்: ஏஎஃப்பி