மாஸ்கோ: ஒலிம்பிக் போட்டியில் போட்டியிட தமக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ரஷ்யாவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை யுலியா எஃபிமோவா (படம்) விளையாட்டுத் துறைக்கான நடுவர் மன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருக்கிறார். ஊக்கமருந்து பரிசோதனை யில் 24 வயது எஃபிமோவா தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அடுத்த வாரம் தொடங்கும் ஒலிம்பிக் போட்டி யில் போட்டியிட அனைத்துலக நீச்சல் சம்மேளனம் அவருக்குத் தடை விதித்தது.
"விளையாட்டுத் துறைக்கான நடுவர் மன்றத்திடம் மேல்முறை யீடு செய்ய நாங்கள் முடிவு செய்துள்ளோம். அனைத்துலக ஒலிம்பிக் மன்றம், அனைத்துலக நீச்சல் சம்மேளனம், ரஷ்ய ஒலிம்பிக் மன்றம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடவிருக்கிறோம் என்று எஃபிமோவாவின் முகவரான ஆன்ட்ரே மிட்கோவ் தெரிவித்தார்.