இப்பருவத்தின் விலையுர்ந்த முதல் 1-0 விளையாட்டாளர்களில் ஒருவராக இடம்பிடித்துள்ளார் நியூகாசல் குழுவில் இருந்து டோட்டன்ஹம் ஸ்பர்ஸ் குழுவிற்கு சென்றுள்ள மோசுவா சிசோக்கோ. அவரை 30 மில்லியன் பவுண்டுகளுக்கு வாங்கியுள்ளது ஸ்பர்ஸ். மத்திய திடல் விளையாட்டாளரான அவரை ஏற்கெனவே எவர்ட்டன் குழு வாங்கவிருந்த நேரத்தில், சிசோக்கோவிற்கும் எவர்ட்டனுக்கும் இடையே சம்பளம் தொடர்பாக இணக்கம் ஏற்படாததால் எவர்ட்டன் குழு அவரை வாங்கும் எண்ணத்தை கைவிட்டது. எனவே கடைசி நேரத்தில், 27 வயது சிசோக்கோவை ஐந்து ஆண்டு ஒப்பந்தத்தில் ஸ்பர்ஸ் குழு வாங்கியது.
"உங்களுக்காகவும் குழுவிற்காகவும் சிறப்பாக விளையாடு வேன்," என்று ஸ்பர்ஸ் குழு ரசிகர்களிடம் கூறினார் சிசோக்கோ. அதேபோல், கடைசி நாளன்று சிசோக்கோவிற்கு முன்னதாக மார்சே குழு விளையாட்டாளரான ஜார்ஜிஸ் கெவின் நுகுடுவை யும் வாங்கியது ஸ்பர்ஸ்.
ஆக அதிகமாக 89 மில்லியன் பவுண்டுகள் கொடுத்து வாங்கப்பட்ட மான்செஸ்டர் யுனைடெட்டின் பால் போக்பா. படம்: ஏஎஃப்பி