தமிழ்நாடு பிரிமியர் லீக்: தூத்துக்குடி அணி வெற்றி

சென்னை: முதன்முறையாக நடத்தப்பட்ட தமிழ்நாடு பிரிமியர் லீக் (டிஎன்பிஎல்) 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தூத்துக்குடியின் 'ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ்' அணி 122 ஓட்ட வித்தியாசத்தில் சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் அணியைத் தோற்கடித்து கிண்ணத்தைக் கைப்பற்றியது. முதலில் பந்தடித்த தூத்துக்குடி அணி 20 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 215 ஓட்டங்களை எடுத்தது. அவ்வணியின் கௌ‌ஷிக் காந்தி 59, அபினவ் முகுந்த் 82*, தினேஷ் கார்த்திக் 55 ஓட்டங்களை எடுத்தனர். கடினமான இலக்கை விரட்டிய சேப்பாக்கம் அணிக்குத் தொடக்கமே பேரதிர்ச்சியாக இருந்தது.

முதல் ஓவரிலேயே ஓட்டம் எதுவும் எடுக்காமல் நான்கு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது அந்த அணி. சுழற்பந்து வீச்சாளர் கணேஷ் மூர்த்தி ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார். இறுதியில் சேப்பாக்கம் அணி 93 ஓட்டங்களை மட்டும் எடுத்து படுமோசமாகத் தோற்றது. ஆட்ட நாயகனாக கணேஷ் மூர்த்தியும் தொடர் நாயகனாக திண்டுக்கல் அணியின் ஜெகதீசனும் (397 ஓட்டங்கள்) தேர்வு பெற்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!