159 நாடுகள், 4,342 போட்டியாளர்கள், 22 விளையாட்டுகளில் 528 போட்டிகள் என்று கடந்த 12 நாட்களாக பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் களைகட்டிய உடற்குறையுள்ளோருக்கான பாராலிம்பிக் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த உலக விளையாட்டுத் திருவிழாவின் நிறைவு விழா புகழ்பெற்ற மரக்கானா காற்பந்து விளையாட்டரங்கத்தில் சிங்கப்பூர் நேரப்படி நேற்று காலை கோலாகலமாகவும் பிரம்மாண்டமாகவும் நடந்தேறியது. போட்டிகளில் பங்கேற்ற அனைத்து விளையாட்டாளர்களும் திடலில் அமர்ந்திருக்க, கண்ணைக் கவரும் வாணவேடிக்கைகளுடன் தொடங்கியது இந்த விழா. பிறக்கும்போதே இரு கைகளும் இல்லாமல் பிறந்தபோதும் பெயர் பெற்ற இசைக் கலைஞராக விளங்கும் ஜோனதன் பேஸ்டோஸ் (வலது படம்) கால் விரல்களாலேயே கீபோர்ட், கிட்டார் இசைக் கருவிகளை வாசித்துக் காட்டி அரங்கில் திரண்டிருந்த பார்வையாளர்களையும் விளையாட்டாளர்களையும் அதிசயிக்க வைத்தார். படங்கள்: ராய்ட்டர்ஸ், ஏஃப்பி
பாராலிம்பிக் போட்டிகள் நிறைவு
20 Sep 2016 07:17 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Sep 2016 07:22
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!