நீச்சல் வீரர்களுக்கு தேசிய தின விருது

சிங்கப்பூரின் நீச்சல் நட்சத்திரங்களான ஜோசஃப் ஸ்கூலிங்குக்கும் திரேசா கோவுக்கும் தேசிய தின விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியில் பங்கெடுத்த ஸ்கூலிங் தங்கம் வென்றார். அதுமட்டுமல்லாது, புதிய ஒலிம்பிக் சாதனை நேரத்தையும் படைத்தார். அவருக்கு மெச்சத்தக்க சேவை விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டியில் (பாராலிம்பிக்) சிங்கப்பூருக்காக இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற யிப் பின் சியூ, 2008 ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் நடைபெற்ற போட்டியில் தங்கம் வென்றபோது இந்த மெச்சத் தக்க சேவை விருதைப் பெற்றார். பாராலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற திரேசா கோவுக்குப் பொதுச் சேவை நட்சத்திர விருது வழங்கப் படும். அவர் ஏற்கெனவே பொதுச் சேவை விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. விருதுகளை அடுத்த மாதம் தேசிய தின விருது வழங்கும் நிகழ்ச்சியில் அதிபர் டோனி டான் கெங் யாம் வழங்குவார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!