ஜெரோமி: மேத்யூ கடும் புயலில் புரட்டிப்போடப்பட்ட ஹெய்ட்டிக்கு அனைத்துலக சமூகத்திடமிருந்து பெரிய அளவில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன. சுமார் 1.4 மில்லியன் மக்களுக்கு அவரசகால உதவி தேவை என்று ஐநா தலைமை குறிப்பிட்டது. கடந்த வாரம் மேத்யூ புயல் ஹெய்ட்டியை நோக்கி வீசியது. இதில் குறைந்தது 372 பேர் கொல்லப்பட்டனர். முன்பு எட்ட முடியாத இடங்களையும் தற்போது மீட்புப் பணியாளர்கள் நெருங்கியிருப் பதால் இறந்தவர்களின் எண் ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.
மேத்யூ தாண்டவத்தில் வீடுகள் தரை மட்டமாகின. சாலைகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. கால்நடைகள் கொல்லப்பட்டன. இந்த நிலையில் அடுத்த ஆறு மாதங்களில் ஹெய்ட்டியின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு 120 மில்லியன் டாலர் நிவாரண உதவிக்கு ஐநா கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த திங்கட் கிழமை விடுத்த அறைகூவலில் ஹெய்ட்டிக்கு பெருமளவில் உதவி தேவைப்படுகிறது என்று தலைமை செயலாளர் பான் கீ மூன் குறிப்பிட்டார். "வரை படத்தில் காண முடியாத அளவுக்கு சில கிராமங் களும் நகரங்களும் அழிந்து விட்டன," என்றார் அவர். இம்மாதம் 4ஆம் தேதி மேத்யூ புயல் மணிக்கு 230 கிலோ மீட்டர் வேகத்தில் அமெரிக்காவின் தென் கிழக்குப் பகுதிகளையும் தாக்கியது. இதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர்.