மேத்யூ தாண்டவமாடியதில் 1.4 மி. மக்கள் தவிப்பு

ஜெரோமி: மேத்யூ கடும் புயலில் புரட்டிப்போடப்பட்ட ஹெய்ட்டிக்கு அனைத்துலக சமூகத்திடமிருந்து பெரிய அளவில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன. சுமார் 1.4 மில்லியன் மக்களுக்கு அவரசகால உதவி தேவை என்று ஐநா தலைமை குறிப்பிட்டது. கடந்த வாரம் மேத்யூ புயல் ஹெய்ட்டியை நோக்கி வீசியது. இதில் குறைந்தது 372 பேர் கொல்லப்பட்டனர். முன்பு எட்ட முடியாத இடங்களையும் தற்போது மீட்புப் பணியாளர்கள் நெருங்கியிருப் பதால் இறந்தவர்களின் எண் ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

மேத்யூ தாண்டவத்தில் வீடுகள் தரை மட்டமாகின. சாலைகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. கால்நடைகள் கொல்லப்பட்டன. இந்த நிலையில் அடுத்த ஆறு மாதங்களில் ஹெய்ட்டியின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு 120 மில்லியன் டாலர் நிவாரண உதவிக்கு ஐநா கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த திங்கட் கிழமை விடுத்த அறைகூவலில் ஹெய்ட்டிக்கு பெருமளவில் உதவி தேவைப்படுகிறது என்று தலைமை செயலாளர் பான் கீ மூன் குறிப்பிட்டார். "வரை படத்தில் காண முடியாத அளவுக்கு சில கிராமங் களும் நகரங்களும் அழிந்து விட்டன," என்றார் அவர். இம்மாதம் 4ஆம் தேதி மேத்யூ புயல் மணிக்கு 230 கிலோ மீட்டர் வேகத்தில் அமெரிக்காவின் தென் கிழக்குப் பகுதிகளையும் தாக்கியது. இதில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!