ஆஸ்திரேலியாவைப் புரட்டி எடுத்த தென்னாப்பிரிக்கா

கேப்டவுன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி அமோக வெற்றி பெற்று உள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசிப் போட்டி கேப்டவுனில் பகல்=இரவாக நேற்று முன்தினம் நடைபெற்றது. பூவா தலையாவில் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்தடித்தது. அந்த அணி நிர்ண யிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 327 ஓட்டங்களைக் குவித்தது. ரூசோ அபாரமாக விளையாடி தனது நான்காவது சதத்தைப் பதிவு செய்தார். அவர் 118 பந்துகளில் 122 ஓட்டங்களும் டுமினி 75 பந்துளில் 73 ஓட்டங்களும் மில்லர் 29 பந்துகளில் 39 ஓட்டங்களும் எடுத்தனர்.

328 ஓட்டங்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீரர் வார்னர் அதிரடியாக விளை யாடினார். அவர் 88 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் சதத்தைத் தொட்டார். 85வது போட்டியில் விளையாடிய அவருக்கு இது ஒன்பதாவது சதமாகும்.

ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டை தென்னாப்பிரிக்க வீரர் டி காக் சாய்த்ததை அடுத்து அவரிடம் ஓடிச் சென்று கொண்டாட்டத்தில் இறங்குகிறார் சக வீரரான சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாகீர் (வலது). தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டத்துக்கு ஆஸ்திரேலிய வீரர்களால் இறுதி வரை பதிலடி கொடுக்க முடியாமல் போனது. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!