பெனால்டி வாய்ப்புகளைக் கோட்டைவிட்டு சிட்டி ஏமாற்றம்

மான்செஸ்டர்: கிடைத்த இரண்டு பெனால்டி வாய்ப்புகளை கோலாக்கத் தவறிய மான்செஸ்டர் சிட்டி, எவர்ட்டனுக்கு எதிரான ஆட்டத்தில் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது. ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் டி பிராய்ன எடுத்த பெனால்டியை எவர்ட்டனின் கோல்காப்பாளர் மார்ட்டின் ஸ்டெகலென்பர்க் தடுத்து நிறுத்தினார். இ டை வே ளை யி ன் போ து ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலை யில் இருந்தது. பிற்பாதி ஆட்டத்திலும் கோல் போட சிட்டி எவ்வளவோ முயன்றும் எவர்ட்டனின் தற்காப்பு அரண் விட்டுக்கொடுக்கவில்லை.

இந்நிலையில், ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் எவர்ட்டனின் ரொமேலு லுக்காக்கு கோல் போட்டு சிட்டியை அதிர்ச்சியில் உறைய வைத்தார். இதையடுத்து, சிட்டிக்கு இன்னொரு பெனால்டி வாய்ப்புக் கிட்டியது. ஆனால் சிட்டியின் நட்சத்திர வீரர் செர்கியோ அகுவேரோ எடுத்த இந்த பெனால்டியையும் எவர்ட்டன் கோல்காப்பாளர் முறியடித்தார். இருப்பினும், 72வது நிமிடத்தில் சிட்டி நொலிட்டோ மூலம் ஒருவழியாக ஆட்டத்தைச் சமன் செய்தது. மற்றோர் ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளர் லெஸ்டர் சிட்டியை செல்சி 3-0 எனும் கோல் கணக்கில் பந்தாடியது. ஆட்டத்தின் 7வது நிமிடத் திலேயே செல்சியின் டியேகோ கோஸ்டா அனுப்பிய பந்து வலையைத் தீண்டியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!