முன்னாள் ஆர்சனல், லிவர்பூல் காற்பந்து ஆட்டக்காரர் ஜெர்மைன் பென்னன்ட்டின் தெம்பனிஸ் ரோவர்ஸ் குழுவுடனான பயணம் இந்தப் பருவத்துடன் நிறைவுக்கு வருகிறது. அல்பிரெக்ஸ் நிகாட்டா குழு விற்கு எதிராக நாளை நடக்கும் சிங்கப்பூர் கிண்ண இறுதி ஆட் டமே தெம்பனிஸ் குழுவிற்காக 33 வயது பென்னன்ட்டின் கடைசிப் போட்டியாக இருக்கும்.
இவ்வாண்டு தொடக்கத்தில் ரோவர்சில் இணைந்த பென்னன்ட் உடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட தெம்பனிஸ் குழு ஆர்வமாக இருந்தபோதும் அவர் அதனை நிராகரித்துவிட்டதாக அக்குழுவின் தலைவர் கிருஷ்ணா ராமச்சந்திரா தெரிவித்தார். இதையடுத்து, 21 வயதுக்குட் பட்ட இங்கிலாந்துக் குழுவின் முன்னாள் வீரரான பென்னன்ட்டை ஒப்பந்தம் செய்ய சில இங்கி லாந்துக் குழுக்களும் தென்கிழக்காசியக் குழுக்கள் சிலவும் ஆர்வம் காட்டுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.