பெர்த்: டூமினி, எல்கர் அடித்த சதத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் தென்னாப் பிரிக்கா வலுவான நிலையில் உள்ளது. நேற்று நடைபெற்ற மூன்றாவது நாள் ஆட்டத்தின் முடிவில் நான்கு விக்கெட் டுகள் எஞ்சியிருக்க 388 ஓட்டங்கள் முன்னிலையுடன் தென்னாப்பிரிக்கா இருக்கிறது. தனது முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்களின் அபாரப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 242 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதனை அடுத்து, பந்தடித்த ஆஸ்தி ரேலிய அணி 244 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் முதல் இன்னிங்சில் வெறும் இரண்டு ஓட்டங்கள் வித்தியாசத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த தென் னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கியது. நேற்று முன்தினம் இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் அந்த அணி இரு விக்கெட்டுகள் இழப்பிற்கு 104 ஓட்டங்கள் எடுத்திருந்தது. டூமினி 34 ஓட்டங்களு டனும் எல்கர் 46 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.