பாரிஸ்: ஆண்களுக்கான டென் னிஸ் உலகத் தரவரிசையின் முதலிடத்தை பிரிட்டனின் ஆண்டி மரே நெருங்கியுள்ளார். டென்னிஸ் போட்டியில் முடி சூடா மன்னனாக இருந்து முதலிடத்தை வகித்து வரும் செர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோக்கோவிச் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் காலிறுதி யில் தோல்வி அடைந்து வெளி யேறினார். இறுதிச் சுற்றுக்கு அவர் தகுதி பெற்றிருந்தாலே முதலிடத்தைத் தக்கவைத்திருக்கலாம்.
காலிறுதியில் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ள மரே, அதில் வாகை சூடினால் முதல்முறையாக தரவரிசையில் முதலிடம் வகிப்பார் என்பது குறிப் பிடத்தக்கது. அரையிறுதியில் மிலோஸ் ராவ்னிச்சை மரே எதிர்கொள்கிறார்.