ஃபாரோ: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் போர்ச்சுகல் 4-1 எனும் கோல் கணக்கில் லாட்வியாவைத் தோற்கடித்து உள்ளது. போர்ச்சுகலின் அபார வெற் றிக்கு அதன் அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வித்திட்டார். ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் அவர் போர்ச்சுகலின் கோல் கணக்கைத் தொடங்கி வைத்தார். லாட்விய ஆட்டக்காரர் சொந்த பெனால்டி எல்லையில் தப்பாட்டம் புரிந்ததால் போர்ச்சுகலுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
இதை ரொனால்டோ கோலாக் கினார். இடைவேளையின்போது போர்ச்சுகல் 1-0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. பிற்பாதி ஆட்டம் தொடங்கி போர்ச்சுகலுக்கு மீண்டும் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ரொனால்டோ அனுப்பிய பந்து இம்முறை கோல் கம்பம் மீது பட்டு வெளியானது.