கோவை: 32வது தேசிய அளவிலான தடகளப் போட்டி கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் நேற்று முன்தினம் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக் கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த கௌதமி, சமயஸ்ரீ மற்றும் வெளி மாநில வீராங்கனைகள் கலந்து கொண்டு ஓடினர். அப்போது எதிர்பாராத விதமாக கௌதமியின் காலணி களில் ஒன்று கழன்றது.
ஆனால், அதை அந்த வீராங்கனை பொருட்படுத்தாமல் ஒரு கால் காலணியுடனேயே ஓடி பந்தயத்தை நிறைவு செய்தார். அவருக்கும் சக வீராங்கனை சமயஸ்ரீக்கு கடும் போட்டி நில வியது. இந்தப் போட்டியில் கௌதமி முதலிடத்தில் வந்து தங்கப்பதக் கம் வென்றார். இந்தப் போட்டிக்கு இவர் எடுத்துக்கொண்ட நேரம் 2 நிமிடம் 18 வினாடிகள். இரண்டாம் நிலையில் வந்த சமயஸ்ரீ மயிரிழையில் தங்கப் பதக்கம் பெறும் வாய்ப்பைத் தவறவிட்டு 2வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒரு காலணியுடன் ஓடித் தங்கம் வென்ற கௌதமியை ரசிகர்கள் பாராட்டினர்.
வலதுகாலில் காலணி கழன்ற நிலையில் ஓடி சாதனை படைத்த தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டதைச் சேர்ந்த கெளதமி. 800 மீட்டர் தூரத்தை இவர் 2 நிமிடம், 18 வினாடிகளில் கடந்தார். படம்: தமிழக தகவல் சாதனம்