லண்டன்: மாணவப் பருவத்தில் காற்பந்து விளையாட்டைக் கற்றுக் கொண்டு காற்பந்து உலகில் காலடி பதிக்க வந்த சிறார்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியாக பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக் கும் முன்னாள் காற்பந்து விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் பேரி பென்னெல் லண்ட னுக்கு அருகேயுள்ள ஒரு தங்கும் விடுதியில் கடந்த திங்கட்கிழமை சுயநினைவின்றி காணப்பட்டார். 62 வயது பேரி பென்னெல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.
அவரிடம் காற்பந்துப் பயிற்சி- பெற்ற முன்னாள் காற்பந்தாட்ட வீரர்கள் பலர், அவர் மீது அளித்த அடுக்கடுக்கான பாலியல் புகார்- களையடுத்து பென்னெல் தலை மறை வானார். இதுவரையிலும் ஐந்து காவல் நிலையங்களில் அவர் மீது பாலியல் புகார்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சிறார்களிடம் தவறாக நடந்து கொண்டது குறித்து அவர் மீது காவல் துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.