பேங்காக்: சுசுகி கிண்ணக் காற்பந்துப் போட்டியில் தாய்லாந்து ஐந்தாவது முறையாக கிண்ணம் ஏந்தியுள்ளது. நேற்று முன்தினம் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் இறுதிப் போட்டியின் இரண்டாவது ஆட்டத் தில் தாய்லாந்து 2-0 எனும் கோல் கணக்கில் இந்தோனீசியாவை வீழ்த்தியது. இதன் விளைவாக ஒட்டு மொத்த கோல் அடிப்படையில் 3-2 எனும் கோல் கணக்கில் தாய்லாந்து வாகை சூடி கிண்ணத்தைக் கைப்பற்றியது.
சில நாட்களுக்கு முன்பு ஜகார்த் தாவில் நடைபெற்ற முதல் ஆட்டத் தில் இந்தோனீசியா 2-1 எனும் கோல் கணக்கில் தாய்லாந்தை தோற்கடித்து முன்னிலை வகித் தது. கிண்ணத்தை ஏந்தவேண்டு மாயின் இரண்டாவது ஆட்டத்தில் வென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்துடன் தாய்லாந்து களமிறங்கியது.
கிண்ணம் ஏந்திக் கொண்டாடும் தாய்லாந்து குழுவினர். படம்: லிம் சின் தாய்