சுவர்ப்பந்து: பட்டத்தைக் கைப்பற்றிய இந்திய அணி

ஹாங்காங்: ஆசிய ஜூனியர் சுவர்ப்பந்துப் போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி மாபெரும் வெற்றியாளர் பட்டத்தைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டுள்ளது. இப்போட்டி ஹாங்காங்கில் நடைபெற்றது. ஆண்கள் பிரிவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, மலேசியாவுடன் மோதி யது. முதல் ஆட்டத்தில் இந்திய வீரரான சென்னையைச் சேர்ந்த 18 வயது வேலவன் செந்தில்குமார் 12-10, 11-0, 11-2 என்ற நேர் செட்டில் மலேசியாவின் ஓங் சாய் ஹங்கைப் புரட்டி எடுத்தார். இரண்டாவது ஆட்டத்தில் இந்தியாவின் அபய் சிங் 10-12, 7-11, 11-5, 14-12, 11-6 என்ற செட் கணக்கில் போராடி மலேசி யாவின் டேரன் ராகுலை தோற் கடித்தார். இதன் மூலம் இந்திய அணி 2=0 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி கிண்ணம் ஏந்தியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!