சிங்கப்பூர் நீச்சல் வீரர் ஜோசப் ஸ்கூலிங்குக்கு நேற்று எஸ்டி விளையாட்டு வீரர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை இரண்டாவது தடவை பெறும் முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையை ஸ்கூலிங் பெறுகிறார். முதல் எஸ்டி விருதை 2015ஆம் ஆண்டு பெற்றார். 'ஃபேரர் ஹோட்டல் அண்ட் ஸ்பா'வில் நடந்த இந்த விருதளிக்கும் விழாவில் ஜோசப் ஸ்கூலிங்கின் பெற் றோர் கோலின், மே ஸ்கூலிங் ஆகியோர் கலந்துகொண்டு ஜோசப் ஸ்கூலிங்குக்காக விருதை அமைச்சர் கிரேஸ் ஃபூவிடம் இருந்து பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சி யில் சுமார் 150 பேர் கலந்துகொண்டனர். 21 வயதாகும் ஜோசப் கடந்த ஆண்டு நடந்த ஒலிம் பிக் விளையாட்டுப் போட்டியில் சிங்கப்பூரின் முதல் தங்கப் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்தார். இப்போது அமெரிக்- கப் பல்கலைக்கழகத்தில் பட்டக்கல்வி பயிலும் ஜோசப் ஸ்கூலிங் 'ஸ்கைப்' மூலம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
மீண்டும் எஸ்டி விளையாட்டு வீரர் விருது பெற்ற ஸ்கூலிங்
17 Feb 2017 07:56 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Feb 2017 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!