மான்செஸ்டர்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் காலி றுதிக்கு முந்திய சுற்றுக்கான முதல் ஆட்டத்தில் மொனாக் கோவுக்கு எதிராக மான்செஸ்டர் சிட்டி கோல் மழை பொழிந்து 5=3 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது. இருப்பினும், காலிறுதிக்குத் தகுதி பெறவேண்டுமாயின் மொனாக்கோவில் நடைபெறும் இரண்டாவது ஆட்டத்திலும் சிட்டி கோல்களைப் போடவேண்டும் என்று அக்குழுவின் நிர்வாகி பெப் கார்டியோலா தெரிவித்துள்ளார். இரண்டாவது ஆட்டத்தில் சிட்டி கோல்கள் போடாவிடில் அதன் சாம்பியன்ஸ் லீக் பயணம் ஒரு முடிவுக்கு வரும் என்று கார்டியோலா எச்சரிக்கை விடுத் துள்ளார்.
மான்செஸ்டர் சிட்டியின் ஐந்தாவது கோலைப் போடும் லீரோய் சானே (இடது). படம்: ராய்ட்டர்ஸ்