லண்டன்: வெஸ்ட் ஹேம் குழுவுக்கு எதிராக நேற்று அதிகாலை நடைபெற்ற இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தில் 2=1 எனும் கோல் கணக்கில் செல்சி வாகை சூடியது. இந்த வெற்றியின் விளைவாக லீக் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஸ்பர்ஸ் குழுவைவிட செல்சி 10 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று வலுவான நிலையில் முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில், தமது குழு வெற்றி அடைந்திருப்பது குறித்து செல்சியின் நிர்வாகி அண்டோனி யோ கோண்ட்டே மகிழ்ச்சி தெரி வித்தார். இருப்பினும், தொடர்ந்து வெற்றிகளைச் சுவைத்து வருவ தால் மெத்தனப்போக்குடன் இருந்துவிடக்கூடாது என்று அவர் தமது வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். "லீக் பட்டத்தை வெல்ல ஆசைப்படுவது நல்ல விஷயம் தான். ஆனால் இந்த இலக்கை அடையவேண்டுமாயின் செல்சி வீரர்கள் தங்கள் கவனத்தைச் சிதறவிடக்கூடாது," என்று கோண்ட்டே வலியுறுத்தினார்.
செல்சியின் விக்டர் மோசஸ் (இடது). படம்: ராய்ட்டர்ஸ்