வீ. பழனிச்சாமி
தேசிய அளவில் காற்பந்தாட்டம் சிறப்பாக அமைந்து அனைத்துலக அளவிலான தரப்பட்டியலில் சிங்கப்பூரின் நிலை உயரவேண் டும் என்றால் அதன் முன்னேற்றப் பணி அடித்தளத்திலிருந்து தொடங்கப்பட வேண்டும் என் கிறார் உள்ளூர் காற்பந்து ஆர்வலர் ஆர். வெங்கடாசலம். "அடித்தளம் என்றால் அது பள்ளியிலேயே தொடங்கப்பட வேண்டும். பள்ளியில்தான் காற் பந்து விளையாட்டை மாணவர்கள் முறையாக விளையாடத் தொடங்கு கிறார்கள். அந்த நிலையில் காற் பந்தாட்டம் முறையாகக் கவனிக் கப்பட்டு, சரியான திசை நோக்கி புறப்பட்டால் அது எதிர்கால காற் பந்து வீரர்களை உருவாக்கும்," என்று தெரிவித்த வெங்கா, நேற்று தமிழ் முரசுக்குப் பேட்டியளித்தார்.
"பள்ளிப் பருவத்தைக் கடந்து காற்பந்து விளையாடும் மாண வர்கள் அடுத்த நிலைக்கு முன் னேறுகிறார்கள். அவர்கள் அடித் தளக் காற்பந்துக் குழுக்களிலோ காற்பந்துச் சங்கங்களிலோ சேர்ந்து தங்கள் திறனை வளர்த் துக் கொள்கிறார்கள்.