லண்டன்: இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டிக் கான அரையிறுதி ஆட்டத்தில் ஆர்சனலும் மான்செஸ்டர் சிட்டி யும் இன்று இரவு மோதுகின்றன. வெம்ப்ளி விளையாட்டரங்கத் தில் நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெறும் குழு இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெறும். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக ஏமாற்றங்களைச் சந் தித்து வரும் ஆர்சனல், சிட்டியை முறியடிக்க வேண்டுமாயின் கவ னத்தைச் சிதறவிடாமல் சிறப்பாக விளையாடவேண்டும்.
அண்மையில் நடைபெற்ற ஆட் டங்களில் சிறப்பாக விளையாடாத காரணத்தினால் ஆர்சனல் இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் ஆறாவது இடத்துக்குச் சரிந்து உள்ளது. அதுமட்டுமல்லாது, பயர்ன் மியூனிக்கிடம் தோல்வி அடைந் ததை அடுத்து அதன் சாம்பியன்ஸ் லீக் கனவும் கலைந்தது. மிடல்ஸ்புரோ குழுவுக்கு எதிராகக் கடுமையாகப் போராடி ஒருவழியாக 2=1 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது. பிரிமியர் லீக், சாம்பின்ஸ் லீக் ஆகிய போட்டிகளில் கிண்ணம் வெல்லும் வாய்ப்பு கைவிட்டுச் சென்றுள்ள நிலையில், எஃப்ஏ கிண்ணத்தை எப்படியும் வெல்லவேண்டும் என்று ஆர்சனல் விழைகிறது.