லண்டன்: இங்கிலாந்து பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டிகளில் சிறந்த தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்திய பெருமையில் திளைத்த டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவை நேற்று அதி காலை நடைபெற்ற எஃப்ஏ கிண்ண அரையிறுதிப் போட்டியில் திணறடித்து 4=2 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி கொண் டது செல்சி. நேற்றைய ஆட்டத்தைக் கண்டு களித்த ரசிகர்கள் அனைவருக்கும் இந்தக் காற்பந்து பருவத்தில் பிரிமியர் லீக் விருதையும் எஃப்ஏ கிண்ண விருதையும் ஒருசேர தட்டிச்சென்றுவிடும் வாய்ப்பு செல்சி குழுவுக்கே அதிகம் என்பது தெரிந்திருக்கும். ஆட்டத்தின் தொடக்கத்தில் ஸ்பர்ஸ் அணி கொடுத்த நெருக்கு தலைச் சமாளித்து தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் பயன் படுத்திக்கொண்டு செல்சி கோல்கள் போட்டவிதம் ரசிகர் களைப் பரவசப்படுத்தியது.
நேற்றைய ஆட்டத்தில் செல்சியின் நான்காவது கோலை போட்டு ஸ்பர்ஸ் குழுவை மீளா துயரத்தில் ஆழ்த்தினார் நிமான்யா மாட்டிச் (எண் 21 பொறிக்கப்பட்ட நீல மேல்சட்டை அணிந்திருப்பவர்). படம்: ஏஎஃப்பி