2019 உலகக்கிண்ணப் போட்டியுடன் ஓய்வு: டு பிளஸ்ஸி அறிவிப்பு

ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்க டெஸ்ட் மற்றும் டி20 அணியின் கேப்டனான டு பிளஸ்ஸி 2019 உலகக் கிண்ணப் போட்டியுடன் அனைத்துலகக் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்துக் கூறிய அவர், "2019 உலகக்கோப்பை வரை எல்லா வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவேன். பிறகு ஓய்வு பெற்றுவிடுவேன். நான் மட்டுமல்ல, மேலும் வீரர்கள் சிலரும் உலகக்கோப்பைக்குப் பிறகு ஓய்வுபெறும் மனநிலையில் உள்ளார்கள். "டெஸ்ட் தொடர்களில் இருந்து விலகுவது என்பது டிவில்லியர்ஸின் முடிவு. அவர் 12 ஆண்டுகளாக நாட்டுக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். அவர் டெஸ்ட் ஆடவேண்டும் என்பதே என் விருப்பமும். ஆனால் அவர் முடிவை மதிக்கிறேன். அவர் தகுந்த ஓய்வு எடுத்துக்கொண்டு 2019 உலகக்கிண்ணப்போட்டியின்போது புத்துணர்ச்சியுடன் விளையாடுவார்," என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!