அன்டால்யா: டென்னிஸ் விளை யாட்டில் உலகத் தரவரிசையில் எட்டாமிடத்தில் இருக்கும் ஆஸ் திரிய வீரர் டோமினிக் தீமை வீழ்த்தி ஆச்சரியமளித்துள்ளார் 222ஆம் நிலையில் உள்ள இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன், 22. துருக்கியில் நடைபெற்று வரும் அன்டால்யா ஓப்பன் தொடரின் காலிறுதிக்கு முந்திய சுற்று ஆட் டத்தில் ராம்குமார் 6=3, 6=2 என்ற நேர் செட்களில் தீமைத் தோற்கடித்தார். 59 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது. உலகத் தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் ஒருவரை ராம்குமார் வீழ்த்தியது இதுவே முதன்முறை.
டோமினிக் தீம் உலகின் முன் னாள் முதல்நிலை ஆட்டக்கார ரான ரஃபாயல் நடாலை இரு முறை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றபோதும் ராம்குமார் மகிழ்ச்சி யில் துள்ளிக் குதிக்காமல் அமை தியாக வந்து தீமுடன் கைகுலுக்கி தன்னடக்கத்துடன் நடந்துகொண் டார்.
சென்னையைச் சேர்ந்த இவர் போட்டிக்குப் பின் பேசுகையில், "எனது கடின உழைப்புக்குப் பலன் கிடைத்துள்ளது. இதுவே எனது சிறந்த வெற்றி! இது தொடக்கம்தான். இனி வெற்றி மேல் வெற்றி வந்து சேரும் என நம்புகிறேன்," என்றார். தகுதிநிலை வீரராக இந்தத் தொடருக்குள் அடியெடுத்து வைத்த இவர், காலிறுதிச் சுற்றில் அனுபவ வீரரான சைப்ரஸ் நாட் டின் மார்க்கோஸ் பாக்டாட்டிசை எதிர்த்தாடவுள்ளார்.
ஆயினும், விம்பிள்டன் போட் டியின் தகுதிச் சுற்றுக்குக்கூட ராம்குமார் தகுதி பெறாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
டோமினிக் தீமை வீழ்த்தியதே இதுவரையில் தான் பெற்ற வெற்றிகளில் சிறந்தது என்று கூறும் ராம்குமார் ராமநாதன். கோப்புப்படம்