கொண்டாட்ட மழையில் நனைந்த ஜெர்மனி குழு

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்: ரஷ்யாவில் நடைபெற்ற கான்ஃபெடரேஷன்ஸ் கிண்ண காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி வெற்றி பெற்று கிண்ணம் ஏந்தியுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சிலியுடன் ஜெர்மனி மோதியது. இந்தப் போட்டியில் ஜெர்மனி கிண்ணம் வென்றிருப்பது இதுவே முதல்முறை. ஆட்டம் தொடங்கியதிலிருந்து சிலி பல தாக்குதல்களை நடத் தியது. இருப்பினும், கோல்களைப் போட அது தவறியது.

இந்நிலையில், ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் சிலியின் தற்காப்பில் நேர்ந்த குளறுபடியால் ஜெர்மனிக்கு கோல் போட பொன்னான வாய்ப்பு கிட்டியது. வலிய வந்த வாய்ப்பை ஜெர்மனி வீணாக்கவில்லை. கோல் வலைக்கு அருகில் சிலி தற்காப்பாளரிடமிருந்து பந்தைப் பறித்த ஜெர்மனி வீரர் சக வீரரான லார்ஸ் ஸ்டின்டலிடம் அதை அனுப்பினார். பந்து வலைக்குள் செல்வதை சிலியின் கோல்காப் பாளரால் தடுக்க முடியாமல் போனது. இதையடுத்து, ஆட்டத் தை எப்படியும் சமன் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் சிலி தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது.

போராடி வென்ற கிண்ணத்துடன் ஜெர்மனி வீரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!