காற்பந்து: ரஷ்யா வந்தடைந்தது பிரேசில் அணி

சோச்சி: ரஷ்யாவில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்காக நெய்மார் தலை மையிலான பிரேசில் அணி நேற்று முன்தினம் ரஷ்யா வந்தடைந்தது. ஆஸ்திரியாவின் தலைநகர மான வியன்னாவில் நடைபெற்ற நட்புமுறை ஆட்டத்தில் பிரேசில் அணி ஆஸ்திரியாவை 3=0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது. காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள நட்சத்திர வீரரும் அணியின் தலைவருமான நெய் மார், ஆஸ்திரியா அணிக்கு எதிரா ன ஆட்டத்தில் கோல் போட்டு அசத்தியிருந்தார். கடந்த பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக விளை யாடிய நெய்மார், பிரேசிலின் இரண்டாவது கோலை போட்டார். அனைத்துலகப் போட்டியில் நெய்மார் போட்ட 55வது கோலாக இது அமைந்தது. இதன் மூலம் முன்னாள் வீரரான ரொமாரியோவின் சாத னையை அவர் சமன் செய்தார். கடந்த 1987-2005ஆம் ஆண்டு வரை பிரேசில் அணிக்காக விளையாடிய ரொமாரியோ 55 கோல்கள் போட்டிருந்தார். இந்த வகை சாதனையில் பேலே 77 கோல்களும், ரொனால்டோ 62 கோல்களும் போட்டு முதல் இரு இடங்களில் உள்ளனர்.

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை முன்னிட்டு பிரேசில் அணி ரஷ்யாவின் சோச்சி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் வந்து இறங்கியது. விமானத்திலிருந்து இறங்கி வருபவர்களில் அணியின் தலைவர் நெய்மார் (இடது), பயிற்றுவிப்பாளர் டிட்டே (வலது). படம்: ஏஎஃப்பி

மேலும் செய்திகளுக்கு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!