கஸன்: போட்டிகள் தொடங்க இரு நாட்களே இருந்த நிலையில் பயிற்றுவிப்பாளர் அதிரடியாக நீக்கப்பட்டபோதும் போர்ச்சுகலுக்கு எதிரான சவால்மிக்க தொடக்க ஆட்டத்தில் ஸ்பெயின் அணியின ரின் ஆட்டம் மெச்சும்படியாகவே இருந்தது. அந்த ஆட்டத்தை வெல்லமுடி யாவிடினும் சமநிலையில் முடிந்து ஒரு புள்ளியைக் கைப்பற்றியதால் ஸ்பெயின் மீதான நெருக்கடி சற்றே குறைந்தது. அதே நேரத்தில், ஈரானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வென்று, தனது நிலையை வலுப் படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ஸ்பெயின் உள்ளது. ஈரானுடன் ஸ்பெயின் மோதுவது இதுவே முதல் முறை. ஆட்டக் காரர்களின் திறமையை வைத்துப் பார்க்கையில், ஈரானை ஸ்பெயின் எளிதில் வீழ்த்தக்கூடும்.
ஆயினும், கிண்ணத்தைத் தக்கவைக்கும் முனைப்பில் இருக் கும் ஜெர்மனி, மெக்சிகோவிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது கிண்ணம் வெல்ல வாய்ப்புள்ள தாகக் கருதப்படும் வேறு சில அணிகளுக்கு எச்சரிக்கை விடுப் பதாக அமைந்தது. அதை ஸ்பெயி னும் நன்கு உணர்ந்திருக்கிறது. "ஜெர்மனிக்கு நடந்தது யாருக்கு வேண்டுமானாலும் நடக் கலாம்," என்கிறார் ஸ்பெயினின் புதிய பயிற்றுவிப்பாளரான ஃபெர்னாண்டோ ஹியரோ. "32 அணிகளுமே திறமையான அணிகள்தான். முதல் ஆட்டம் எல்லா அணிகளுக்கும் சிரமமான ஒன்றுதான். பதற்றமின்றி விளை யாட வேண்டியது அவசியம்," என்று ஹியரோ சொன்னார்.