இந்தியாவுக்கு இரண்டு தங்கம்

ஜகார்த்தா: ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆறாம் நாளான நேற்று இந்தியாவுக்கு மேலும் இரண்டு தங்கப் பதக்கங்கள் கிட்டின. டென்னிஸ் விளையாட்டில் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா = திவிஜ் சரண் இணை 6=3, 6=4 என்ற செட் களில் கஸக்ஸ்தானின் அலெக் சாண்டர் பப்லிக் = டெனிஸ் யெவ்செயெவ் இணையைத் தோற் கடித்து, தங்கத்தைக் கைப்பற் றியது. இதனுடன் சேர்த்து, தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது.

கடந்த முறை யூகி பாம்ப்ரியுடன் சேர்ந்து வெண்கலப் பதக்கம் வென்றிருந் தார் திவிஜ் சரண். ஆசிய விளையாட்டுப் போட்டி களில் போபண்ணா பதக்கம் வென்றிருப்பது இதுவே முதல் முறை. படகு வலித்தலிலும் நேற்றைய நாள் இந்தியாவுக்குச் சிறப்பான நாளாக அமைந்தது. ஆடவருக்கான 'ஸ்கல்' குழுப் பிரிவில் இந்தியாவின் சவர்ன் சிங், டட்டு போக்கனல், ஓம் பிரகாஷ், சுக்மீத் சிங் ஆகியோர் அடங்கிய குழு தங்கப் பதக்கம் வென்றது. ஆடவருக்கான ஒற்றையர் 'லைட்வெய்ட் ஸ்கல்' பிரிவில் துஷ்யந்த் வெண்கலம் வென்றார். 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் துஷ்யந்த் இதே பிரிவில் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல, இரட்டையர் பிரிவில் ரோகித் குமார் - பகவான் சிங் இணை வெண்கலத்தைக் கைப்பற்றியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!