புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பந்தடிப் பாளர் ரோகித் சர்மா. இவர் துணை அணித் தலைவருமாக இருக்கிறார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக இருக்கிறார். இவர் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் மூன்று முறை வெற்றியாளர் பட்டம் வென்றுள்ளது.
விராத் கோஹ்லியைவிட ரோகித் சர்மா, டோனி ஆகியோர் அணித் தலைவராக இருந்தால் இந்திய அணிக்கு நல்லது என்று பேசப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் "துணை அணித் தலைவராக எனது பொறுப்பு விராத் கோஹ்லியின் அணித் தலைவர் பதவிக்கு மாற்றாக இருக்க வேண்டும் என்பதுதான். அவருக்கு ஐயப்பாடு ஏற்பட்டாலோ அல்லது உதவி தேவைப்பட்டாலோ நான் உதவி புரிவேன்," என்றார்.