சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றமும் 'ஸ்போர்ட் சிங்கப்பூர்' அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த வருடாந்திர விளையாட்டு விருதுகள் நிகழ்ச்சி கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ச்சர்ட் ஹோட்டலில் இடம்பெற்றது. அப்போது ஆண்டின் சிறந்த விளையாட்டுச் செய்தியாளராக 'தி நியூ பேப்பர்' நாளிதழின் உதவி ஆசிரியர் திலன்ஜீத் சிங் அறிவிக்கப்பட்டார்.
ஆனால், உண்மையில் அவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழின் செய்தியாளர் சயாலி அப்துல் அஸிஸ். நிர்வாகத் தவறு காரணமாக அந்தப் பிழை நிகழ்ந்துவிட்டதாகக் குறிப்பிட்ட 'ஸ்போர்ட்எஸ்ஜி', விருதும் $2,000 ரொக்கப் பரிசும் திரு சயாலிக்கு அளிக்கப்பட்டு விட்டதாகத் தெரிவித்தது. இத்தவற்றுக்காக திலன்ஜீத்திடமும் சயாலியிடமும் அந்த அமைப்பு மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.