துபாய்: இம்மாதம் 30ஆம் தேதி தொடங்கி, ஜூலை 14ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் பத்து மில்லியன் அமெ ரிக்க டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது.
வெற்றி பெறும் அணி நான்கு மில்லியன் அமெரிக்க டாலரைத் தட்டிச் செல்லும். இறுதிப் போட்டி யில் தோற்கும் அணிக்கு இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர் கிடைக்கும்.
அரையிறுதிப் போட்டிகளில் தோற்கும் இரு அணிகளுக்குத் தலா 800,000 அமெரிக்க டாலர் பரிசுப் பணம் கிடைக்கும்.
இந்தியா உட்பட மொத்தம் பத்து அணிகள் பங்கேற்கும் உலகக் கிண்ணத் தொடரில் லீக் போட்டிகளில் வெல்லும் அணி களுக்கு US$40,000 பரிசாக வழங்கப்படும். அத்துடன், லீக் சுற்றைக் கடந்து அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறும் அணி களுக்கு ஊக்கத்தொகையாக US$100,000 வழங்கப்படும்.