பந்தைச் சேதப்படுத்தியதற்காக கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை பெற்றார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்.
இந்நிலையில், தடைக்காலம் முடிந்து மீண்டும் அவர் அனைத்துலகப் போட்டியில் விளையாடி வந்தாலும் செல்லுமிடம் எல்லாம் ரசிகர்கள் அவரை ‘ஏமாற்றுக் காரர்!’ எனக் கூச்சலிட்டு, கேலி செய்கின்றனர். நேற்று முன்தினம் லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதிய உலகக் கிண்ணப் போட்டியின்போதும் இது தொடர்ந்தது.
அப்போது பந்தடித்துக்கொண்டிருந்த இந்திய அணித் தலைவர் கோஹ்லி ரசிகர்களின் செயலைக் கண்டு வெகுண்டெழுந்தார். உடனே, “என்ன செய்கிறீர் கள்? கிண்டல் செய்வதை விட்டுவிட்டு கரவொலி எழுப்பி அவரை உற்சாகப் படுத்துங்கள்,” எனும்படியாக ரசிகர்களை நோக்கி சைகை காட்டினார் கோஹ்லி.
அதைத் தொடர்ந்து இந்திய ரசிகர்கள் அமைதியாகினர். இதைக் கண்டு நெகிழ்ந்த ஸ்மித், கோஹ்லிக்குக் கை கொடுத்து நன்றி தெரிவித்தார்.
போட்டிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கோஹ்லி, “ரசிகர்களின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த காலத் தில் நடந்தது எல்லாருக்கும் தெரியும். அதற்காகத் தடை பெற்று, தற்போதுதான் அவர் திரும்பியுள்ளார். தமது அணிக்காக நன்றாக விளையாட அவர் முயல்கிறார். அதற்காக ஒவ்வொரு முறை களமிறங் கும்போதும் அவருக்கு நெருக்கடி தரும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது. ரசி கர்களின் செயலுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
கோஹ்லியின் நடத்தையை முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் வரவேற்றுள்ளனர்.