கோஹ்லியின் செயலுக்குப் பெரும் வரவேற்பு

பந்தைச் சேதப்படுத்தியதற்காக கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை பெற்றார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்.

இந்நிலையில், தடைக்காலம் முடிந்து மீண்டும் அவர் அனைத்துலகப் போட்டியில் விளையாடி வந்தாலும் செல்லுமிடம் எல்லாம் ரசிகர்கள் அவரை ‘ஏமாற்றுக் காரர்!’ எனக் கூச்சலிட்டு, கேலி செய்கின்றனர். நேற்று முன்தினம் லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதிய உலகக் கிண்ணப் போட்டியின்போதும் இது தொடர்ந்தது.

அப்போது பந்தடித்துக்கொண்டிருந்த இந்திய அணித் தலைவர் கோஹ்லி ரசிகர்களின் செயலைக் கண்டு வெகுண்டெழுந்தார். உடனே, “என்ன செய்கிறீர் கள்? கிண்டல் செய்வதை விட்டுவிட்டு கரவொலி எழுப்பி அவரை உற்சாகப் படுத்துங்கள்,” எனும்படியாக ரசிகர்களை நோக்கி சைகை காட்டினார் கோஹ்லி.

அதைத் தொடர்ந்து இந்திய ரசிகர்கள் அமைதியாகினர். இதைக் கண்டு நெகிழ்ந்த ஸ்மித், கோஹ்லிக்குக் கை கொடுத்து நன்றி தெரிவித்தார்.

போட்டிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கோஹ்லி, “ரசிகர்களின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த காலத் தில் நடந்தது எல்லாருக்கும் தெரியும். அதற்காகத் தடை பெற்று, தற்போதுதான் அவர் திரும்பியுள்ளார். தமது அணிக்காக நன்றாக விளையாட அவர் முயல்கிறார். அதற்காக ஒவ்வொரு முறை களமிறங் கும்போதும் அவருக்கு நெருக்கடி தரும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது. ரசி கர்களின் செயலுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

கோஹ்லியின் நடத்தையை முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் வரவேற்றுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!