முதல் டெஸ்ட்டை கைப்பற்றியது இந்திய அணி

இந்தூர்: பங்ளாதேஷ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியின் மூன்றாவது நாளான நேற்று, முதல் இன்னிங்சை 493 ஓட்டங்களில் இந்திய அணி ‘டிக்ளேர்’ செய்தது. இதையடுத்து பங்ளாதேஷ் அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது.

ஆனால், ஆரம்பம் முதலே பங்ளாதேஷ் வீரர்களால் இந்திய அணியினரின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியவில்லை. இதனால், அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தபடி இருந்தன.

பங்ளாதேஷ் அணியில் ஐந்து வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக முஷ்ஃபிகுர் ரஹிம் 64 ஓட்டங்களும் மெஹிடி ஹசன் மிராஜ் 38 ஓட்டங்களும் லிதன் தாஸ் 35 ஓட்டங்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இதனால் இரண்டாவது இன்னிங்சில் 213 ஓட்டங்களுடன் பங்ளாதேஷ் அணி சுருண்டது.

இதன்மூலம் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் முகம்மது ஷமி அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

அவருக்கு அடுத்து அஸ்வின் மூன்று விக்கெட்டுகளும் உமேஷ் யாதவ் இரண்டு விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இப்போட்டியில் இரட்டை சதமடித்த மயங்க் அகர்வால் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!