காற்பந்து உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய மறைந்த டியகோ மரடோனாவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அர்ஜெண்டினாவில் உள்ள வீட்டில் அவருக்கு மாரடைப்பு ஏற் பட்டதாக வழக்கறிஞர்கள் தெரி வித்தனர். அவருக்கு வயது 60.
கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் மரடோனா பாதிக்கப்பட்டிருந்தார். சில வாரங் களுக்கு முன்பு அவருக்கு அவசர மூளை அறுவை சிகிச்சை செய்யப் பட்டது.
இந்த நிலையில் பியூனஸ் அயர்ஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்த மரடோனா வுக்கு புதன்கிழமை அன்று மாரடைப்பு ஏற்பட்டது. இதைக் கேள்விப்பட்டதும் நாடே விரும்பும் மகனுக்கு அஞ்சலி செலுத்த ஏராள மானவர்கள் அவரது வீட்டு முன்பு கூடினர். அவர்களில் பலர் உலகக் கோப்பையை மரடோனா முத்த மிடும் படங்களை கையில் வைத்து இருந்தனர். இவ்வேளையில் அர்ஜெண்டினா அரசாங்கம், மூன்று நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என அறிவித்து உள்ளது.
“நீங்கள் எங்களை உலகின் உச்சத்துக்கே கொண்டு சென்று எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி னீர்கள். எங்களுடன் நீங்கள் இருந்ததற்காக நன்றி தெரிவிக் கிறோம். நாங்கள் எல்லோரும் உங்களை இழந்து தவிக்கிறோம்,” என்று அதிபர் அல்பெர்டோ ஃபெர்னாண்டஸ் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அர்ஜெண்டினா மக்கள் மரடோ னாவை ‘எல் டியாஸ்’ என்று அழைக்கின்றனர். இதற்கு கடவுள் என்று பொருள்படும். 1986ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடந்த உலகக் கிண்ணப் போட்டியில் அர்ஜெண்டினா வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த மரடோனா அழியாப் புகழைப் பெற்றார். இங்கிலாந்துக்கு எதிரான அந்த ஆட்டத்தில் அவர் போட்ட 2வது கோல் நூற்றாண்டின் மிகச்சிறந்த கோல் என்று இன்றும் வருணிக்கப்படுகிறது. தனியொரு ஆளாக மைதானத்தில் தனது சொந்த பகுதியிலிருந்து கிட்டத்தட்ட அனைத்து இங்கிலாந்து ஆட்டக்காரர்களையும் தாண்டி பந்தை லாவகமாக தட்டிச் சென்று வலைக்குள் செலுத்தினார். இதே ஆட்டத்தில் இவர் கையால் போட்ட முதல் கோல் சர்ச்சையில் சிக்கியது.
இது பற்றி பின்னர் ஒரு ேபட்டியில் பேசிய மாரடோனா, “அது ஆண்டவனின் கை,” என்று கூறியிருந்தார்.
ஆனால் போதைப் பொருள், மதுபானங்களுக்கு அடிமையானதால் மரடோனாவின் உடல்நிலை பிற் காலத்தில் மோசமடைந்தது.
இதற்கிடையே நேற்று மர டோனாவின் உடல் அதிபர் மாளிகைக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அங்கு ஆயிரக் கணக்கானவர்கள் வரிசையில் நின்று அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
“தலைசிறந்த காற்பந்து வித்த கரை இழந்துள்ளோம். நீங்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது,” என்று போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ புகழாரம் சூட்டி உள்ளார்.