பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தவர் தற்போது தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் படம் 'தலைவி'. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெய
லலிதா கதாபாத்திரத்தில்
கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இவருடன் அரவிந்த்சாமி, மதுபாலா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏப்ரல் 23ஆம் தேதி திரை
யரங்குகளில் 'தலைவி' வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், கொரோனா பரவலால் 'தலைவி' படத்தின் வெளியீட்டைத் தேதி குறிப்பிடாமல் படக்குழுவினர் ஒத்தி வைத்துள்ளனர்.
நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த கங்கனா, தற்போது தயாரிப்பிலும் இறங்கியுள்ளார். தனது 'மணிகர்னிகா பிலிம்ஸ்' சார்பில் 'டிக்கு வெட்ஸ் ஷெரு' என்ற படத்தைத் தயாரிக்கவுள்ளார். இப்படம் நேரடியாக 'ஓடிடி'யில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
'மணிகர்னிகா' படத்தில் நடித்துக்கொண்டு இயக்கவும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.