ரோம் / லிஸ்பன்: கத்தாரில் நடைபெறவுள்ள அடுத்த உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் பிரபல அணிகளான இத்தாலி, போர்ச்சுகல் ஆகிய இரண்டில் ஒன்று இடம்பெறாது. உலகக் கிண்ணத்திற்கான 'பிளேயாஃப்' தகுதிச் சுற்றில் இவ்விரு அணிகளும் ஒரே பாதையில் இடம்பெறுகின்றன. தங்களின் முதல் 'பிளேயாஃப்' ஆட்டங்களை வென்றால் அடுத்த ஆட்டத்தில் இரண்டும் மோதும். இவ்வாட்டத்தை வெல்லும் அணி மட்டுமே உலகக் கிண்ணத்திற்குச் செல்லும்.
கடந்த ஐந்து உலகக் கிண்ணப் போட்டிகளுக்குச் சென்ற போர்ச்சுகல் அதற்கு முன்பு இப்போட்டிக்கு அதிகம் தகுதிபெற்றதில்லை. சென்ற முறை 60 ஆண்டுகளில் முதன்முறையாக உலகக் கிண்ணத்திற்குத் தகுதிபெறவில்லை இத்தாலி.