சிங்கப்பூர்: உலக நீச்சல் போட்டிகளில் ஆண்கள் 100 மீட்டர், 50 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி பிரிவுகளில் பங்கேற்க முதன்முறையாகத் தகுதிபெற்றுள்ளார் சிங்கப்பூர் வீரர் தியோங் ட்சென் வெய். இவ்வாண்டு நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்கத் தவறிய மனவலியை ஒதுக்கிவிட்டு இம்முயற்சியில் வெற்றிகண்டுள்ளார் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் இரண்டு முறை தங்கப் பதக்கம் வென்றுள்ள 24 வயது தியோங்.
ஆண்கள் 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியை 50 விநாடிக்குள் முடித்த முதல் சிங்கப்பூர் வீரர் என்ற பெருமையைக் கடந்த வெள்ளிக்கிழமையன்று பெற்றார் தியோங்.
பெண்கள் பிரிவுகளில் 16 வயது சிங்கப்பூர் வீராங்கனை ஏஷ்லி லிம்மும் முதன்முறையாக உலக நீச்சல் போட்டிகளில் பங்கேற்க நேற்று தகுதிபெற்றார்.