சிங்கப்பூரின் பூப்பந்தாட்ட நட்சத்திரம் லோ கியன் இயூவிற்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
அதனால் தனிமையில் இருக்கும் லோ, திங்கட்கிழமையன்று (1 ஆகஸ்ட்) நடைபெற்ற கலப்புப் பிரிவு அரையிறுதிச் சுற்றில் பங்கேற்கவில்லை.
அரையிறுதிச் சுற்றில் 3-0 எனும் ஆட்டக்கணக்கில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது சிங்கப்பூர்.
செவ்வாய்க்கிழமையன்று (2 ஆகஸ்ட்) நடைபெறும் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் இவ்வாண்டின் காமன்வெல்த் விளையாட்டுகளை ஏற்று நடத்தும் இங்கிலாந்துடன் சிங்கப்பூர் பொருதும்.
தான் கலந்துகொண்ட அரையிறுதியாட்டத்தில் மலேசியாவிடம் 3-0 எனும் ஆட்டக்கணக்கில் தோல்வியுற்றது இங்கிலாந்து.