பிர்மிங்ஹம்: காமன்வெல்த் மற்போர் போட்டிகளில் நேற்று முன்தினம் ஒரே நாளில் இந்தியா மூன்று தங்கப் பதக்கங்களை வென்றது.
ஆண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 65 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
பெண்களுக்கான 62 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் தங்கம் வென்றார். இந்திய வீரர் தீபக் புனியா, பாகிஸ்தானின் முகம்மது இனாமை வீழ்த்தி தங்கம் வென்றார்.
ஆண்களுக்கான 125 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் மோஹித் கிரேவால் வெண்கலம் வென்றார். 68 கிலோ 'பி' எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன் வெண்கலப் பதக்கம் வென்றார்.