காமன்வெல்த் விளையாட்டுகளின் ஆண்கள் ஒற்றையர் பூப்பந்துப் போட்டியில் வெளியேற்றப்பட்டுள்ளார் உலக விருதை வென்ற சிங்கப்பூரின் லோ கியன் இயூ.
காலிறுதிச் சுற்றில் 15-21, 21-14, 21-11 எனும் ஆட்டக்கணக்கில் ஆண்களுக்கான உலகத் தரவரிசையில் 42வது இடத்தை வகிக்கும் மலேசியாவின் இங் ட்சி யோங்கிடம் லோ தோல்வியடைந்தார்.
காலிறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் வெற்றிபெற்ற லோ அதற்குப் பிறகு தடுமாறினார்.
அண்மைக் காலமாக சிறப்பாக ஆட சற்று சிரமப்பட்டுவரும் லோ, கடந்த மே மாதத்திலிருந்து அதிக ஓய்வின்றி பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருவதைச் சுட்டினார்.
"என்னால் முடிந்தவரை முயற்சி செய்தேன், இங் சிறப்பாக விளையாடினார். இந்தத் தோல்வியை எவ்வாறு கையாள்வது என்பதை நான் ஆராயவேண்டும்," என்று லோ குறிப்பிட்டார்.