திரைத் துளி­கள்

 உடல்நிலை பாதிக்கப் பட்டுள்ள போதிலும், கடமையே கண்ணாகச் செயல்பட்டுள்ளார் சமந்தா. அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப் பட்டுள்ளவர், அதற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், புதுப் படத்துக்கான பின்னணிக் குரல் பதிவு பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக திரையுலகத்தில் சமந்தாவுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

“வாழ்க்கையில் நாம் மட்டுமே சவால்களை எதிர்கொள்வதாக நினைத்துவிடக்கூடாது. ஒவ்வொருவருக்கும் எத்தனையோ சவால்கள் காத்திருக்கின்றன. அவர்களும் நம்மைப்போல் போராட வேண்டி இருக்கும். ஒருமுறை எதையாவது முடிவு செய்தால் அதை செய்தே தீருவேன். ஒரு கதாபாத்திரத்துக்காக உயிரைக் கொடுத்து நடிக்கும்போது, சொந்த குரலில் பேச வேண்டும் என விரும்புகிறேன். அதனால்தான் மருத்துவமனையில் இருந்த போதும்கூட எனது பாத்திரத்துக்கு நானே பின்னணிக் குரல் கொடுத்தேன்,” என்கிறார் சமந்தா.

 எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் மனதுக்குப் பிடிக்காத கதைகளில் நடிக்க ஒப்புக்கொள்வது இல்லை என்கிறார் வடிவேலு. இதன் காரணமாக தம்மை திமிர் பிடித்தவன் என்று யாரேனும் விமர்சித்தால், அதுகுறித்து தாம் கவலைப்படுவது இல்லை என்கிறார்.

“என்னிடம் கதை சொல்ல பல இயக்குநர்கள் வருகிறார்கள். அவர்கள் சொல்லும் கதை பிடிக்க வில்லை என்றால் அதில் நடிக்க மறுத்துவிடுவேன். அப்படி நான் நடிக்க மறுத்த படங்களின் இயக்குநர்கள் என்னைப் பற்றி வெளியில் தவறாகப் பேசுகிறார்கள். வடிவேலுக்கு ரொம்ப திமிர் என்று வதந்தியைப் பரப்புகிறார்கள். பொறாமையால் இப்படிச் செய்கிறார்கள் என்பதுதான் உண்மை. எனது நடிப்பை மக்கள் ரசிக்க வேண்டும். அதற்கேற்ற கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன்,” என்கிறார் வடிவேலு.

 சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ரத்தம்’ படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியாகி உள்ளது. கண்ணன் நாராயணன் இசையமைத் துள்ளார். மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் என மூன்று கதாநாயகிகள் உள்ளனர். இயக்குநர்கள் வெங்கட்பிரபு, வெற்றிமாறன், பா.ரஞ்சித் ஆகியோரின் பிண்ணனிக் குரல் ஒலிக்க முன்னோட்டக் காட்சிகள் தொகுக்கப் பட்டுள்ளன. எளிய மனிதனாக வாழ விரும்பும் இளைஞன் ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலையால் வன்முறை பாதையைத் தேர்ந்தெடுக்க நேரிடுகிறது. இதற்கான

பின்னணி என்ன என்பதை இப்படம் அலசுமாம்.

“இந்த உலகத்தில் சாதாரண வாழ்க்கையைக்கூட ஒருவன் போராடித்தான் பெற வேண்டியிருக்கும். யாருக்கு என்ன மாதிரியான வாழ்க்கையைத் தரவேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் நம்மிடம் இல்லை,” என்பன போன்ற அழுத்தமான வசனங்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனவாம்.

 செல்வராகவன் நடித்துள்ள ‘பகாசூரன்’ படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியாகி உள்ளது.

‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரெளபதி’, ‘ருத்ரதாண்டவம்’ ஆகிய சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியுள்ள மோகன்ஜி இயக்கும் புதிய படம் இது. அதனால் படம் குறித்த

எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தன் வீட்டில் பணியாற்றி வந்த சுபாஷ் சந்திரபோஸ் மீது நடிகை பார்வதி நாயர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். மேலும் தனது புகைப்படங்களை சுபாஷ் தவறான முறையில் பயன்படுத்து வதாகவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில், சுபாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

 மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாகவும் கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும் நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று முன்தினம் முடிவுக்கு வந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!