$220லிருந்து $350க்கு அதிகரிக்கிறது
நிலப் போக்குவரத்து ஆணையம் டிசம்பர் 19ஆம் தேதி முதல் வாகனம் தொடர்பான சில கட்டணங்களை உயர்த்த உள்ளதால் வாகனத்தைச் சொந்தமாக்குவது அதிக செலவுமிகுந்த ஒன்றாக மாற உள்ளது.
டிசம்பர் 5ஆம் தேதியிட்டு வாகன வர்த்தகர்களுக்கு ஆணையம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. அது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளின் கவனத்துக்கு வந்தது.
டிசம்பர் 19 முதல் 25 வகையான கட்டணங்களை உயர்த்த இருப்பதாக அது அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளது.
வாகனப் பதிவு, வாகன உரிமைச் சான்றிதழ் மாற்று, வாகன வகை அனுமதி, வாகன மீட்பு அறிவிப்புகள் போன்றவற்றுக்கான கட்டணங்கள் இதில் அடங்கும்.
நிர்வாகச் செலவுகளைக் கட்டுப்படியானதாக வைத்திருக்க இந்தக் கட்டண உயர்வு அவசியம் என்று ஆணையம் தெரிவித்து உள்ளது. ஆகக் கடைசியாக 2017ஆம் ஆண்டு கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டது.
பெரும்பாலான கட்டணங்கள் 10 விழுக்காடு முதல் 25 விழுக்காடு வரை அதிகரிக்க உள்ளன. அதேநேரம் வாகனப் பதிவுக் கட்டணம் ஆக அதிகமாக 59 விழுக்காடு ஏற உள்ளது.
சிங்கப்பூரில் பயன்படுத்த வாங்கப்படும் ஒவ்வொரு வாகனத்தையும் பதிவு செய்யும்போது செலுத்தப்பட வேண்டிய பதிவுக் கட்டணம் தற்போது $220 ஆக உள்ளது. இது $350க்கு உயருகிறது.
பதிவுக் கட்டணம் கடந்த ஆண்டுகளில் அவ்வப்போது ஏற்றப்பட்டு வந்துள்ளது. 2000ஆம் ஆண்டில் $140 ஆக இருந்த இக்கட்டணம் 2017ல் $220 என்கிற அளவுக்குப் படிப்படியான ஏற்றம் கண்டது. இந்த இரு காலகட்டத்திற்கும் இடைப்பட்ட உயர்வு விகிதம் 57 விழுக்காடு.
ஆண்டுதோறும் 45,000 முதல் 125,000 வரையிலான புதிய வாகனங்கள் சிங்கப்பூரில் பதிவு செய்யப்படுகின்றன. அதன் அடிப்
படையில் கட்டண உயர்வைக் கணக்கிட்டால், வாகனப் பதிவு மூலமாக மட்டும் $5.9 மில்லியன் முதல் $16.3 மில்லியன் வரை ஆணையத்திற்குக் கூடுதல் வருவாய் கிட்டும்.
வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் புதிய உச்சத்தை நெருங்கும் வேளையிலும் பணவீக்கம் 13 ஆண்டு காணாத அதிகரிப்பைக் கண்டுள்ள நேரத்திலும் வாகனக் கட்டணங்களை உயர்த்தும் நடவடிக்கை வாகன வர்த்தகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரைம் என்னும் பன்மய வாகனக் குழுமத்தின் தலைவர் நியோ நாம் ஹெங் கூறுகையில், “சிக்கன் ரைஸ் முதல் வாகனச் சோதனை வரை எல்லாம் உயருகின்றன. இது செலவைக் கூட்டும் என்பதோடு இந்த அதி
கரிப்பை சுமப்பவர்கள் வாடிக்கையாளர்களே,” என்றார்.