விஜய் நடித்து முடித்திருக்கும் ‘வாரிசு’ படத்தைத் தொடர்ந்து தனது 67வது படத்தில் குடும்பத் தலைவனாக அவர் நடிக்க இருக்கும் செய்தி வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தை ‘மாஸ்டர்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் மீண்டும் இயக்குகிறார்.
நடிகர் விஜய் நடித்திருக்கும் ‘வாரிசு’ படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.
அதனைத்தொடர்ந்து அவர் நடிக்க இருக்கும் படத்தில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு வேடத்தில் நரைமுடி கலந்த தாடி, மீசை வைத்தபடி அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முக்கியமாக மனைவி, மகளுடன் வாழ்ந்து வரும் விஜய் எதிர்பாராத விதமாக குண்டர் கும்பல் தலைவனாக உரு
வெடுக்கிறார். அதன் பிறகு அவரது வாழ்க்கை எப்படி எல்லாம் திசைமாறிப் போகிறது
என்பதுதான் கதையாம்.
இந்தக் கதை ‘எ ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ்’ என்ற படத்தைத் தழுவி உருவாக இருப்
பதாக ஏற்கெனவே தகவல் வெளியான நிலையில், தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் விஜய்யின் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.
‘வாரிசு’ படத்தின் பூசை சென்னையில் நடைபெற்ற அடுத்த சில மணி நேரங்களில் பூசை புகைப்
படங்களை படக்குழுவினர் வெளியிட்டனர். ஆனால், விஜய்யின் 67 படத்தின் பூசை நேற்று முன்தினம் ‘ஏவிஎம் ஸ்டூடியோ’வில் நடந்துள்ளது. இதில் படக்குழுவினர்
மட்டுமே கலந்துகொண்டதாகவும் பூசை சம்பந்தப்பட்ட புகைப்
படங்கள் எதையும் வெளியிட வேண்டாம் என விஜய் நிபந்தனை விதித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதுதான் ஒரு முன்னணி நடிகரின் கடமை.
தனக்கென பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் விஜய், அடுத்த பட விஷயத்தில் இவ்வளவு ரகசியம் காக்க வேண்டிய அவசியம் குறித்து சில தகவல்களும் வெளியாகி உள்ளன.
இந்தப் படம் சம்பந்தமான அதிகாரபூர்வமற்ற முறையில் எந்த ஒரு புகைப்படம் வெளியானாலும் அதை வெளியிடுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்க தனியாக ஒரு நிறுவனத்தை நியமித்துள்ளார்
களாம். அதைப் பூசையிலிருந்தே ஆரம்பித்துவிட்டதாகச் சொல்லப் படுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்டக் காட்சியை நான்கு நாள்
களுக்கு எடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தின் பூசையில் லோகேஷ் கனகராஜ், விஜய், திரிஷா ஆகியோர் கலந்துகொண்டதாக தெரிகின்றது. சில மாதங்களாக இந்தப் படத்தில் விஷால் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகப் பேசப்பட்டது. ஆனால், பூசையில் விஷால் கலந்துகொள்ளவில்லை.
அவருக்குப் பதில் அர்ஜுன் கலந்துகொண்டாராம். இதை வைத்துப் பார்க்கையில் விஷால் நடிப்
பதாக இருந்த வேடத்தில் அர்ஜுன் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
படப்பிடிப்புக்காக அரங்கம் அமைக்கும் பணிகள் சென்னை, பூந்தமல்லியில் உள்ள ‘ஈவிபி ஸ்டூடியோ’வில் நடந்து வருகிறது. அங்கு முதல் கட்டப் படப்பிடிப்பு நடத்தி முடித்த பின் காஷ்மீர் செல்ல உள்ளார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் முன்னோட்ட காட்சியுடன் அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் வெற்றி பெறுவதற்கு வாழ்த்து களை தெரிவித்துள்ளார்.